புதுக்கோட்டை: லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.92 லட்சம் மோசடி செய்த 3 பேரை புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிலின்வினோ மனைவி நிவிதா(26), கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்ராஜா(28), மதுரையைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன் மகன் ராஜ்கமல்(40). இவர்கள் 3 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சேகர், சீனிவாசன், சுப்பையா உள்ளிட்ட 9 பேரிடம் லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.92 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிவிதா, சந்தோஷ்ராஜா, ராஜ்கமல் ஆகிய 3 பேரை நேற்றிரவு கைதுசெய்தனர். மேலும், லண்டனில் வசித்துவரும் அபிலின்வினோவை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago