சென்னை: சென்னை - துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டிக் கொலை. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் அவரை கொலை வெறியுடன் தாக்கி கொலை செய்துள்ளனர். அவர் பைக்கில் வந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இயங்கி வந்துள்ளார். அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்.