சிவகாசியில் மகன் நினைவு நாளில் அங்கன்வாடி பெண் பணியாளர் மகளுடன் தற்கொலை

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசியில் மகன் இறந்த சோகத்தில் இருந்த அங்கன்வாடி பெண் பணியாளர், அவரது நினைவு நாளன்று மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி ரிசர்வ் லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டி தேவி(37). இவரது கணவர் சாலைமுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி(17) என்ற மகளும், மகாராஜா என்ற மகனும் உள்ளனர். பாண்டிதேவி சித்துராஜபுரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மகாராஜா கடந்த 2022 ஜன. 3- ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மகனின் நினைவு நாளில் சாமி கும்பிட்டு விட்டு பாண்டிதேவி மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி இருவரும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE