ராமநாதபுரம் | கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - மருத்துவர் கைது

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் பாரதிநகரில் குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணரான ஜபருல்லா(70) என்பவரின் மருத்துவமனை அமைந்துள்ளது.

இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவலசையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் புகாரின் பேரில் மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து ஜபருல்லாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். நீதித்துறை நடுவர் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது மருத்துவர் மயங்கி விழுந்ததால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு போலீஸ் காவலில் மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE