ஆன்லைன் லாட்டரி விற்பனை: விக்கிரவாண்டி அருகே ஒருவர் கைது

By செய்திப்பிரிவு

விக்கிரவாண்டி அருகே குச்சிப் பாளையம் கிராமத்தில் ஆன்லைன் லாட்டரியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸார் நேற்றுரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த னர்.

அப்போது, மதுரபாக்கத்தை அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம்லாட்டரி விற்பனையில் ஈடுபட் டிருப்பது தெரியவந்துள்ளது. இதை யடுத்து அவரை மடக்கிப் பிடித்த போலீஸார், அவரை விசாரணை செய்த போது, அதேகிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன் என்பதும், செல்போனில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவ ரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE