படூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: சக பேராசிரியர் கைது

By செய்திப்பிரிவு

கேளம்பாக்கம்: படூரில் உள்ள தனி​யார் பல்​கலைக்​கழகத்​தில் கணினி அறி​வியல் பிரி​வில் பேராசிரிய​ராக வேலை பார்த்து வருபவர் சஞ்​சீவ்​ராஜ் (35). இவர் தன்​னுடன் பணி​யாற்​றும் 27 வயது பேராசிரியையிடம் பழகி வந்​துள்​ளார். தொடக்​கத்​தில் நண்​பரைப் போல் பழகி வந்த அவர் பின்​னர் திடீரென இரட்டை அர்த்த வசனங்​களு​டன் பேசத் தொடங்கி உள்​ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை சஞ்​சீவ் ராஜ் உடன் நட்பை முறித்​துக் கொண்டு திட்டி அனுப்பி உள்​ளார். பின்​னர் தனது செயலுக்கு வருத்​தம் தெரி​வித்த சஞ்​சீவ் ராஜ் சில நாட்​கள் அமை​தி​யாக இருந்து விட்டு மீண்​டும் தன் வேலையை காட்டி உள்​ளார். அப்போது அந்த நபரின் கையை கெட்​டி​யாக பிடித்​துக் கொண்ட பேராசிரியை கத்தி கூச்​சல் போட்​டுள்​ளார். உடனே அரு​கில் இருந்த சக பேராசிரியர்​கள் ஓடி வந்து சஞ்​சீவ்​ராஜை தாக்​கி​யுள்​ளனர்.

கேளம்​பாக்​கம் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு வந்து நடத்திய விசாரணையில் சஞ்​சீவ் ராஜ் தன்​னுடன் பணி​யாற்​றும் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்​தது உறு​தி​யானது. இதையடுத்து போலீ​ஸார் சஞ்​சீவ்​ராஜ் மீது வழக்​குப் பதிவு செய்து கைது செய்து திருப்​போரூர் நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தி புழல்​ சிறை​யில்​ அடைத்​தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்