சென்னை | மீன்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை: பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

சென்னை: மீன் கடை வைப்​ப​தில் ஏற்​பட்ட தகராறில் நடந்த கொலை​யில் பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து சென்னை கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. சென்னை எம்​கேபி நகர் சத்​தி​யமூர்த்தி நகரை சேர்ந்த பாரதி - திவ்யா இடையே மீன் கடை வைப்​பது தொடர்​பாக பிரச்​சினை இருந்​துள்​ளது.

இந்த பிரச்​சினை​யில், திவ்​யா​வின் சகோ​தரர் தினேஷ், அவரது நண்​பர் ஜெகன் ஆகியோர் பார​தி​யின் காலில் கத்​தி​யால் வெட்​டி​யுள்​ளனர். இதுகுறித்த புகாரில் தினேஷ், ஜெகன் மீது எம்​கேபி நகர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

இந்த நிலை​யில், கடந்த 2019 செப். 22-ம் தேதி சத்​தி​யமூர்த்திநகர் பகு​தி​யில் ஒரு கடை வாசலில் உட்​கார்ந்​திருந்த ஜெக​னை, பிர​காஷ் (23), அருண் (24), மேக​நாதன் (32), பிர​வீன்​ராஜ் (24), அஜித் (20), நவீன்​கு​மார் (26) ஆகியோர் பயங்கர ஆயுதங்​களு​டன் வந்து வெட்டி கொலை செய்​தனர். 6 பேரும் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டனர்.

சென்னை 16-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எல். ஆபிர​காம் லிங்​கன் முன்பு இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. அரசு தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் டி.ம​கா​ராஜன் ஆஜரா​னார். விசா​ரணை காலத்​தில் மேக​நாதன், நவீன்​கு​மார் உயி​ரிழந்​து​விட்​ட​தால் அவர்​கள் மீதான வழக்கு கைவிடப்​பட்​டது.

இந்​நிலை​யில், போதிய ஆதா​ரங்​கள், சாட்​சி​யங்​களு​டன் குற்​றச்​சாட்​டு​கள் நிரூபிக்​கப்​பட்​ட​தால் பிர​காஷ், அருண், பிர​வீன்​ராஜ், அஜித், பாரதி ஆகிய 5 பேருக்​கும் ஆயுள் தண்​டனை​யும், தலா ரூ.5 ஆயிரம் அபராத​மும் வி​தித்​து நீதிப​தி தீர்ப்​பளித்​தார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

25 mins ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்