ஹரியானா பெண்ணிடம் பண மோசடி: சென்னை விமான நிலையத்தில் கேரள இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை: ஹரி​யானா இளம்​பெண்​ணிடம் பண மோசடி செய்த கேரள இளைஞரை, சென்னை விமான நிலை​யத்​தில் ஹரியானா போலீ​ஸார் கைது செய்​தனர். ஹரியானா மாநிலம் கூர்​கிராம் பகுதியை சேர்ந்த இளம்​பெண் ஒருவர், ஹரியானா போலீ​ஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்றை அளித்​தார்.

அந்த புகாரில், ‘புலன் விசாரணை உயர் அதிகாரி என கூறி என்னை செல்​போனில் தொடர்பு கொண்ட நபர், நான் கிரிப்டோ கரன்​சியை சட்ட​விரோதமாக மாற்றியதாக மிரட்டி, என்னிடம் பண மோசடி செய்​து​விட்​டார். எனவே, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்,’ என குறிப்​பிட்​டிருந்​தார்.

இதையடுத்து, ஹரியானா சைபர் கிரைம் போலீ​ஸார், நடத்திய விசா​ரணை​யில், அந்த நபர், கேரள மாநிலம் மலப்பு​ரத்தை சேர்ந்த அகமது நிஷாம்​(25) என்பது தெரிய​வந்​தது.

அவரை பிடிக்க போலீ​ஸார் பலமுறை முயற்சி செய்த நிலை​யில், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால், தேடப்​படும் குற்​றவாளியாக அவரை அறிவித்து, அனைத்து விமான நிலை​யங்​களி​லும் லுக் அவுட் நோட்​டீஸ் வழங்​கினர்.

இந்நிலை​யில், நேற்று முன்​தினம், சென்னை விமான நிலை​யத்​தில் இருந்து துபாய் வழியாக எகிப்து செல்ல முயன்ற அகமது நிஷாமை, விமான நிலைய குடி​யுரிமை அதிகாரிகள் பிடித்து, ஹரியானா போலீ​ஸில் ஒப்​படைத்​தனர். அவரை கைது செய்து, ஹரி​யானா​வுக்கு அழைத்து சென்​றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்