​விருதுநகர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பைக், சரக்கு வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விருதுநகர்: பழுதாகி நின்ற லாரி மீது பைக் மற்றும் சரக்கு வேன் அடுத்​தடுத்து மோதி​ய​தில் பழ வியாபாரி, பட்டாசுத் தொழிலாளி உட்பட 3 பேர்உயிரிழந்​தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்​தூர் அருகே​யுள்ள ஒரு ஆலையி​லிருந்து சிமென்ட் மூட்​டைகளை ஏற்றிய லாரி நேற்று அதிகாலை மதுரை நோக்​கிச் சென்​றது. விருதுநகர் அருகே அக்ரஹாரப்​பட்டி பாலத்​தில் சென்​ற​போது, லாரி பழுதாகி திடீரென நின்​றது.

அப்போது, லாரி​யின் பின்​னால் வந்த பைக், அதைத் தொடர்ந்து வந்த சரக்கு வேன் ஆகியவை அடுத்​தடுத்து லாரி​யின் பின்​பக்​கத்​தில் மோதி விபத்​துக்​குள்​ளாகின.

இந்த விபத்​தில் பைக்​கில் வந்த விருதுநகர் ஆத்து​மேடு சிவந்​திபுரத்​தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி செல்வம் (36), அந்த பைக்​கில் லிஃப்ட் கேட்டு வந்த இனாம் ​ரெட்​டியபட்டி வினோத் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்​தனர்.

மேலும், சரக்கு வேனின் முன்​பக்​கத்​தில் அமர்ந்து சென்ற கோவில்​பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த பழ வியாபாரி வேல்​முருகன் (43) என்பவரும் அந்த இடத்​திலேயே உயிரிழந்​தார். படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் ரமேஷ் கார்த்திக் (28), விருதுநகர் அரசு மருத்​துவ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். விபத்து தொடர்பாக சிமென்ட் லாரி ஓட்டுநர் அரசபட்டி ஈஸ்வரன், சரக்கு வேன் ஓட்டுநர் கோவில்​பட்டி ரமேஷ் கார்த்திக் ஆகியோர் மீது வச்​சக்​காரப்​பட்டி போலீ​ஸார் வழக்கு ப​திவு செய்து, ​விசா​ரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

59 mins ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்