திருவண்ணாமலை கிரிவலப் பாதை பண்ணை விடுதியில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் விஷமருந்தி தற்கொலை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: கிரிவலப் பாதை​யில் உள்ள பண்ணை விடுதியில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீ​ஸார் விசாரணை நடத்தி வருகின்​றனர்.

திரு​வண்ணாமலை கிரிவலப் பாதை​யில் சூரியலிங்கம் அருகே​ உள்ள பண்ணை விடு​தி​யில், சென்னை வியாசர்​பாடி​யில் வசிப்​ப​தாக​வும், குடும்பத்​துடன் அண்ணா​மலை​யாரை தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும் கூறி, மகாகால வியாசர்​(43), ருக்மணி பிரி​யா(45), ஜலந்​தரி(18), முகுந்த் ஆகாஷ்(15) ஆகியோர் தங்கி​ உள்​ளனர்.

இவர்​கள், நால்​வரும்​ நேற்று முற்​பகல் வரை வெளியே வரவில்லை. இதையடுத்து, அவர்கள் அளித்த செல்​போனை தொடர்பு கொண்​ட​போது, மறுமுனை​யில் அழைப்பு ஏற்கப்​பட​வில்லை. இதனால் சந்தேமடைந்த ஊழியர்​கள், ஜன்னல் வழியாக பார்த்த​போது 4 பேரும் விஷமருந்திய நிலை​யில் கிடந்​துள்ளனர். தகவலறிந்து வந்த திருவண்ணாமலை கிராமிய போலீ​ஸார், கதவை உடைத்து உள்ளே சென்​ற​போது, அவர்கள் உயிரிழந்​திருந்தது தெரிய​வந்​தது. பின்னர் அவர்​களது சடலங்கள் அரசு மருத்​துவக்கல்லூரி மருத்​துவ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டது.

மேலும், அங்கிருந்த கடிதம், செல்​போன்களை கைப்​பற்றினர். ஒரு செல்​போனில் பதிவு செய்​யப்​பட்​டிருந்த வீடியோ இடம்​பெற்றிருந்​தது. ஆன்மிகத்​தின் மீதான அதீத பற்றால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்​டதாக கடிதத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “விசா​ரணைக்​குப் பிறகு முழு விவர​மும் தெரிய​வரும். அவர்கள் சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர்​கள் என தெரியவந்துள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்