மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை கேரள இளைஞர்கள் இருவர் சென்னையில் கைது 

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக, கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலை தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று (18ம் தேதி) மதியம் சிஐடி நகர், 5வது மெயின் ரோட்டில் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலம், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ரமீஸ் (25), அவரது கூட்டாளி அதே மாநிலத்தைச் சேர்ந்த ஈசாக்கு (28) ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்