சென்னை | 20 குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள ரவுடி ஆற்காடு சுரேஷ் கூட்டாளி கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி என்ற தட்சணா (48). இவர் டி.பி.சத்திரம் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளார். மேலும், இவர் மீது 5 கொலை, 3 கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த தட்சிணாமூர்த்தியை அரும்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``டி.பி.சத்திரத்தில் பிரியாணி கடை வைத்திருக்கும் பாபு என்பவர் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் பிரியாணி கடைக்குத் தேவையான பொருட்கள் வாங்க அதே பகுதி கல்லறைச் சாலை வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது, தட்சிணாமூர்த்தி வழிமறித்து தீபாவளிக்கு பணம் கேட்டு கத்திமுனையில் மிரட்டி ரூ.5,500-ஐ பறித்துச் சென்றுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ரவுடி தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்