சென்னை | சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

சென்னை: தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(27). இவர் 2020-ம் ஆண்டு செப்.25-ம் தேதி, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவனை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். பி்ன்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி குற்றச்சாட்டை நிரூபித்தார்.

அதையடுத்து நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பிரசாந்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ.3.05 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்