சென்னை | போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் ரவுடி சி.டி மணியின் கால் முறிந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சி.டி.மணி, போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓடியபோது தவறி விழுந்ததில் அவரது கால் முறிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற சி.டி.மணி (42). இவர் மீது 8 கொலை உட்பட 33 குற்ற வழக்குகள் உள்ளன.தலைமறைவாக இருந்த இவரை சென்னை ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸார் சேலத்தில் அண்மையில் கைது செய்தனர்.

நீலாங்கரை போலீஸாரும் கஞ்சா வழக்கில் சி.டி. மணியைக் கைது செய்திருந்தனர். அதுதொடர்பாக கடந்தஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்து கொண்டிருக்கும்போது, சி.டி.மணி தப்பியோடி கீழே விழுந்து, வலதுகால் முறிந்துவிட்டதாகக் கூறி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸார் நேற்று முன்தினம் சேர்த்தனர்.

முன்னதாக அவர், சோழிங்கநல்லூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் கார்த்திக், ரவுடி சி.டி.மணியை செப்.27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறைத்துறை வார்டில் உள்நோயாளியாக சி.டி.மணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

மேலும்