தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 470 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 470 கிலோ எடை கொண்ட மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளிலிருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த 14 மூட்டைகளை மீட்டு இலங்கை கடற்படையினர் புத்தளம் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் 470 கிலோ மஞ்சள் இருந்தன.

முதற்கட்ட விசாரணையில், இந்த மஞ்சள் மூட்டைகள் தமிழக கடற்பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE