ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலத்தின் ஏலூரு மாவட்டம், பொர்ரபாளையம் எனும் கிராமத்திலிருந்து முந்திரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடிமுள்ளு எனும் ஊருக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது.

இந்த மினி லாரியில் தொழிலாளர்கள் 9 பேர் ஏறினர். இந்நிலையில் ராஜமுந்திரி அருகே தேவரபல்லி மண்டலம், சிலகாவாரிபாகலு எனும் இடத்தில் ஒரு வளைவில் மினிலாரி வேகமாக திரும்பியபோது, நிலைதடுமாறி, அருகில் சுமார் 20 பள்ளத்தில் இருந்த விவசாய நிலத்தில் உருண்டு விழுந்தது. இந்தவிபத்தில் லாரியில் பயணம் செய்த 9 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினிலாரி டிரைவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE