திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த நத்தம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பைக்கில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த நத்தம் போலீஸார் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE