சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணி செய்த டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்ஆர்சி நகர் சத்திய தேவ் அவன்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் மீது கோபாலகிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் சரவணனின் செயல்பாடுகள் சரியில்லாததால் கடந்த 27ம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியுள்ளார்.
வழக்கத்திற்கு மாறான அவரது நடத்தையை சந்தேகித்து, வீட்டில் உள்ள லாக்கர் சாவியை தேடிய போது காணவில்லை. இதையடுத்து வீட்டு லாக்கரை உடைத்து பார்த்தபோது அதிலிருந்த 250 பவுன் நகை 10 கிலோ வெள்ளி பொருட்கள் 25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டில் டிரைவராக பணியாற்றிய சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் அசோக் நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
51 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago