தாம்பரம் காவல் மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் கொலை

By செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் காவல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். குரோம்பேட்டை, நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (50). சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் அதே பகுதியைச்சேர்ந்த சபரி (எ) பிரித்வி ராஜன்(31) என்பவருக்கு ரூ.28 ஆயிரம்கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணம் தருவதாக தாமஸை திருநீர்மலை கருமாரியம்மன் கோயில் அருகே அழைத்து சென்ற சபரி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், சபரி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தாமாக வந்து சரணடைந்தார். போலீஸார்விசாரணையில், தனது தாய்,மனைவியை தாமஸ் தவறாகப் பேசியதால் ஆத்திரத்தில் கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டார். குரோம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் கொலை: தாம்பரம் அடுத்து இரும்புலியூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா (28). இவர் மீது அடிதடி வழக்குகள் தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ சவாரிக்காக நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கார்த்திக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சேகரித்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா எந்த ஆட்டோ ஸ்டாண்டிலும் உறுப்பினர் இல்லை. இருப்பினும் பஸ் நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டிவந்ததாகவும் இதை ஆனந்தன் என்ற ஆட்டோ ஓட்டுநர் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் கார்த்திக் விடாப்பிடியாக அதே இடத்தில் ஆட்டோஓட்டி வந்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த ஆனந்தன் மற்றும்6 நபர்கள் நேற்று முன்தினம் இரவுகார்த்திக் ராஜாவை கத்தியால் வெட்டி விட்டு ஆட்டோவில் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஆனந்தன் (42), சிவகுமார் (எ) ரஞ்சித் (29), கெவின் ராஜ் (21), அஜித்குமார் (28), சாம்ராஜ் (50) ஆகிய 5 பேர் தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

செல்போன் பறித்து கொலை: குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த ராஜேஷ்(30) நேற்று முன்தினம் இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதியில்நடந்து சென்றபோது 3 பேர் கும்பல்அவரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன், பணத்தை பறித்துச் சென்றது.

கோவூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை சிகிச்சைபலன் அளிக்காமல் உயிரிழந்தார். குன்றத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

மேலும்