வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேரிடம் சென்னையில் குரல் மாதிரி பரிசோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக சென்னையில் 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை நேற்று நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2 பெண் உட்பட3 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தரப்பில்மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 பேரையும் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தலாம் என நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் (டிஜிபி அலுவலகம் அருகே) உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் இதற்கான சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி 3 பேருக்கும் நேற்று காலைதனித்தனியாக குரல் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு வெளியாகும்பட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரத்தில் துப்பு துலுங்கும் என சிபிசிஐடி போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சம்பந்தப்பட்ட 3 பேரையும் விதவிதமாக பேசச் சொல்லி குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு ஒலி மற்றும் உச்சரிப்பு வேறுபாடுஇருக்கும். இதை அறிவியல்பூர்வமாக தடய அறிவியல் துறையினர் கண்டறிவார்கள். இதன்முடிவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE