வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை திருட்டு @ நாகூர்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் நூல்கடை தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மனைவி தாவூத் பாத்திமா நாச்சியார்(62). இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகளும், மகனும் வெளிநாட்டில் உள்ளனர். முகமது அலி இறந்துவிட்ட நிலையில், தாவூத் பாத்திமாநாச்சியார், தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

கடந்த மே 3-ம் தேதி நாகூர் புதுமனைத் தெருவில் உள்ள தனதுதம்பி வீட்டுக்கு தாவூத் பாத்திமாசென்றிருந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டுக்கு தாவூத்பாத்திமாவின் மற்றொரு தம்பிசென்றபோது வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப் பது தெரியவந்தது. இது குறித்துதகவலறிந்த தாவூத் பாத்திமா,வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அறைகளில் 5 பீரோக்களில் இருந்த 110 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்றுபார்வையிட்டனர். பின்னர், நாகூர்போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 mins ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்