சென்னை | தொழிலதிபர் வீட்டில் திருடிய முன்னாள் கார் ஓட்டுநர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜா ரமேஷ்.இவரது வீட்டில் சூளைமேட்டைச் சேர்ந்த லூர்து நாதன் (48) என்பவர் கார் ஓட்டுநராகப் பணி செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் பணியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் மீண்டும் வேலை கேட்டு சில தினங்களுக்கு முன்பு முதலாளி ராஜா ரமேஷை சந்திக்க வந்துள்ளார். இந்நிலையில், தொழில் அதிபர் வீட்டிலிருந்த ரூ.9 லட்சம் மாயமாகி உள்ளது. அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் முன்னாள் கார் ஓட்டுநரான லூர்து நாதன் பணத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE