ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை

By செய்திப்பிரிவு

நிஜாமாபாத்: தெலங்கானாவின் நிஜாமாபாமாத் மாவட்டம், ருத்ரூர் எனும் ஊரின் பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது.

இந்த ஏடிஎம்மில் புதன் கிழமைநள்ளிரவு ஜீப்பில் வந்த 4 பேர் கொண்ட முகமூடி கும்பல், ஜீப்பில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராவின் மீது ‘ஸ்ப்ரே’ பெயின்ட் அடித்துள்ளது. அதன் பிறகு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதில் இருந்த ரூ. 25 லட்சத்தை கொள்ளை அடித்துக்கொண்டு, தப்பி சென்று விட்டது.

இவை அனைத்தும் அங்கிருந்த மற்றொரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. முகமூடி அணிந்த அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாக நிஜாமாபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE