பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்: ஆசிரியர் மீது போக்சோ வழக்கு @ தஞ்சை 

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாளில் பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன் (37). இவர் திருவாய்ப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியிடம் கடந்த 6-ம் தேதியில் இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார் என புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்த மாணவி, திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 13-ம் தேதி புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் திருப்பனந்தாள் போலீஸார், ஆசிரியர் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்