காசிமேடு கொலை வழக்கில் இளைஞர் கைது: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: காசிமேட்டில் நிகழ்ந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 2பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, காசிமேடு, பவர் குப்பம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கும் ஏற்கெனவே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி வெங்கட்ராமன் காசிபுரம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்தார்.

அப்போது, அங்கு நண்பர்கள் இருவருடன் வந்த விமல்குமார் வீண் வாக்குவாதம் செய்தார். பின்னர் தகராறு முற்றியதால் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்துவெங்கட்ராமனின் தந்தை சத்யசீலன் காசிமேடு போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். கொலைதொடர்பாக காசிமேடு சிங்காரவேலன் நகர், 4-வது தெருவைச் சேர்ந்த முகேஷ் (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு மூளையாகச் செயல்பட்டு, தலைமறைவாக உள்ள விமல்குமார் உட்பட மேலும் 2 பேரைப் பிடிக்க போலீஸார்தனிப்படை அமைத்துள்ளனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட முகேஷ் நீதிமன்றகாவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE