மதுரையில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் - மூதாட்டியிடம் 1000 பவுன், சொத்து ஆவணங்கள் பறிப்பு :

By செய்திப்பிரிவு

மதுரை: நிலக்கோட்டை அருகிலுள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுதாய் (72). இவரது மகன் நடராஜன் என்பவரின் வீடு, மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது. இந்த வீட்டில் ராமுதாய் தங்கியிருந்தார். நடராஜன் வெளி நாட்டில் பணிபுரிந்த நிலையில், அவர் அனுப்பிய பல கோடி ரூபாயில் ராமுதாயின் அக்கா மகன் பாலமுருகன் சொத்துகளை வாங்கினார்.

இந்த சொத்துக்கான ஆவ ணங்கள் மற்றும் நகைகளுடன் ராமுதாய் மதுரையிலுள்ள மகன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, கடந்த 8-ம் தேதி அத்துமீறி பாலமுருகன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள், துப்பாக்கி முனையில் ராமுதாயை மிரட்டி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் ஆயிரம் பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். ராமுதாய் தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பாலமுருகன், ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE