மணிப்பூர் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளை

By செய்திப்பிரிவு

இம்ப்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது.

இந்த வங்கிக்குள் முகமூடி கொள்ளையர்கள் ராணுவ சீருடையில் துப்பாக்கிகளுடன் நேற்று முன்தினம் சென்றனர். காவலாளிகள் மற்றும் வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் மிரட்டிய கொள்ளையர்கள் அவர்களை கழிவறையில் பூட்டி சிறைவைத்தனர். பின்பு ஒரு அதிகாரியை துப்பாக்கி முனையில்மிரட்டி பணம் வைக்கப்பட்டிருக் கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ரூ.18 கோடியே 80 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE