கும்பகோணம் | இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றிலும் ஏராளமான எலும்புகள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம்மணல்மேட்டைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் அசோக் ராஜன்(27). சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, திரும்பிய போது மாயமானார்.

இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். அப்போது, அசோக் ராஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதே பகுதியில் உள்ள சித்த வைத்தியரான கேசவமூர்த்தி(47) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அசோக் ராஜனைஅவர் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம்புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத்செய்துள்ளார். அசோக் ராஜனுக்குஅண்மையில் செய்ததில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு அசோக் ராஜன்கேட்டதற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேசவமூர்த்தி கூறி யுள்ளார்.

அதன்படி, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியை அசோக் ராஜன்சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, தவறான சிகிச்சையால் அசோக் ராஜன் பாதிக்கப்பட்டதால், தான் போலி மருத்துவர் என்பது வெளியில் தெரிந்துவிடும் எனக் கருதி, அசோக் ராஜனை கொலை செய்ததாக கேசவமூர்த்தி கூறினார்.

இவ்வாறு போலீஸார் தெரி வித்தனர்.

இதற்கிடையே, கேசவமூர்த்தியின் வீட்டுக்குள் இருந்த ஒரு பெட்டியில் இருந்து, சில எலும்புகள், வெள்ளிச் சங்கிலி ஆகிய வற்றை போலீஸார் கைப்பற்றினர். மேலும், வீட்டைச் சுற்றிலும் பலஇடங்களில் தோண்டிப் பார்த்தபோது ஏராளமான எலும்புகள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே, கேசவமூர்த்தியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE