திருவல்லிக்கேணியில் கட்டிட தொழிலாளி கொலை: தப்பியோடிய உறவினர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வெளியூரை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு தங்கி,வேலை பார்த்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த குட்டி என்ற ராஜேந்திரன் (33), செஞ்சியைசேர்ந்த அவரது உறவினர் சுகுமார்(38) ஆகியோரும் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் 2 பேரும் கடந்த 22-ம்தேதி இரவு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பி்ன்னர் 2பேருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராஜேந்திரனைசுகுமார் உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இதையடுத்து, சுகுமார் அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஐஸ்அவுஸ் போலீஸார், ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய,சுகுமாரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த ஊரான செஞ்சியில் பதுங்கியிருந்த சுகுமாரை ஐஸ்அவுஸ் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE