திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தது. அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சென்னை சாதிக்அலி(40), அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் காலணிகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, மற்றொரு விமானத்தில் வந்த புதுக்கோட்டை செங்குட்டுவன் (37) கடத்தி வந்த ரூ.61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோதங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.