மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருடன் தற்கொலை - போலீஸ் விசாரணை

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் கடன் தொல்லை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள ஆவின் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி விசாலினி (39). மகள் ரமீசா(12). இவர்கள் 3 பேரும் வீட்டுக்குள் விஷம் குடித்த நிலையில் தற்கொலை செய்து கொணடது நேற்று இரவு தெரியவந்தது.

தகவல் அறிந்த திருப்பாலை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 3 பேரின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் 3 பேரும் தற்கொலை செய்திருப்பது தெரிகிறது. இருப்பினும், வேறு காரணம் உண்டா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE