பாளையங்கோட்டை அருகே ஊராட்சி கவுன்சிலர் கொலை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (30). இவர், கீழநத்தம் ஊராட்சி வார்டுஉறுப்பினராக இருந்தார். நேற்று ஊருக்கு அருகே உள்ள பாலத்தில் ராஜாமணி அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

பலத்த காயமடைந்த ராஜாமணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

ராஜாமணி

இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியாவிட்டாலும், கொலைக்கு அரசியல் பகை காரணமா? அல்லது சாதிப் பிரச்சினையா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE