தாழம்பூரில் மனைவி, குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற ஐடி ஊழியர் கைது

By செய்திப்பிரிவு

தாழம்பூர்: சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அரவிந்த் (32). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுஜிதா (32), மகள் ஐஸ்வர்யா (7).

இந்நிலையில் நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வங்கிக் கடன் மூலம் வீடு வாங்கி மூவரும் அங்கே குடியேறினர். மேலும் அரவிந்த் ஏராளமான கடன் பெற்றிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். உறவினர்களிடம் கடன் கேட்டும் யாரும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் மனமுடைந்த அரவிந்த் அண்மையில் மனைவி சுஜிதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோரை கொலை செய்து விட்டு, தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீஸார் இறந்த மனைவி, மகளின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டில் மயக்க நிலையில் இருந்த அரவிந்தை மீட்டு வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று அவர் பூரண குணம் அடைந்தார்.

இதனை அடுத்து மனைவி, மகளை கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை தாழம்பூர் போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்