சென்னை | வேளச்சேரியில் தொழிலாளி கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி (45). இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கியிருந்து கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே மேம்பாலத்தின் கீழே தென்காசியைச் சேர்ந்த அவினாஷ் (22) என்பவரும் தங்கியிருந்து, கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கொளஞ்சியும், அவினாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணிஇணைப்புச் சாலையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போதுஇருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே அவினாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கொளஞ்சியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த கொளஞ்சி சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள், வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து சென்று கொளஞ்சியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்