ராஜபாளையம் | சமூக வலைதளம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவா(19) என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது சிவா வேறொரு நபரின் புகைப்படத்தை காட்டி சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

புகைப்படத்தை மாற்றி காட்டினார்: இருவரும் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து சில மாதங்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். அதன்பின் வீடியோ காலில் வந்தபோது புகைப்படத்தை மாற்றி காட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சிறுமி தவிர்த்துள்ளார். அதன்பின் சிறுமியின் புகைப்படங்களை பகிர்ந்து தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் சிவா மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, ஆய்வாளர் கண்ணாத்தாள் தலைமையிலான போலீஸார், சென்னை சென்று சிவாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE