வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மறைமலை நகரில் கொலை - போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று மறைமலைநகர் பகுதியில் சாலையோர கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த 5 பேர், அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மறைமலைநகர் போலீஸார் விரைந்து வந்த உயிரிழந்த காளிதாஸின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காளிதாஸ் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்ட பஞ்சாயத்து ஒன்றுக்கு சென்றதாகவும், அந்த பகையிலும் கொலை நடந்திருக்கலாம் எனவும்போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியgம் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் மற்றும் காளிதாஸின் ஆதரவாளர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE