நாட்டில் புதிதாக 656 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 14,493-ல் இருந்து 13,037 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 3 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 5,31,790 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை 4.49 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சையில் இருப்போர் விகிதம் 0.03% ஆகவும் குணடைந்தோர் விகிதம் 98.79 சதவீதமாகவும் உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.66 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE