தமிழகத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 12, பெண்கள் 4 என மொத்தம் 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 5 பேருக்கும், சென்னையில் 2 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 94,856 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 56,723 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் 8 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.தமிழகம் முழுவதும் தற்போது84 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்றும் உயிரிழப்பு இல்லைஎன்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE