சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 106, பெண்கள் 73 என மொத்தம் 179 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 91,405 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 51,029 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 384 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 2,328 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 183 ஆகவும், சென்னையில் 47 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 1,112 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 20,821 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
» நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கப்படும்: அமித் ஷா
» T20 WC | பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி - 1 ரன் வித்தியாசத்தில் வென்றது ஜிம்பாப்வே!
1,892 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.