தமிழகத்தில் புதிதாக 419 பேருக்கு கரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 242, பெண்கள் 177 என மொத்தம் 419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 94 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து ,74,933 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 32,109 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 444 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 4,785 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் விவரம் : கடலூரைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவருக்கு கடந்த 10-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தவருக்கு, 3 நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து கரோனா தொற்றின் தீவிரத்தால் அவர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 421 ஆகவும், சென்னையில் 94 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,108 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 45,749 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5,675 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 215.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE