சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 916 பெண்கள் 632 என மொத்தம் 1,548 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 42,779 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 91,653 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,964 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 13,094 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,624 ஆகவும், சென்னையில் 353 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று பதிவான நோய் தொற்று பாதிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இன்றைய பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,408 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1,43,384 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
» தமிழகத்தில் புதிதாக 1,624 பேருக்கு கரோனா பாதிப்பு
» தமிழகத்தில் புதிதாக 1,712 பேருக்கு கரோனா; சென்னையில் 368 பேருக்கு பாதிப்பு
20,958 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 203.94 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.