சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 969, பெண்கள் 655 என மொத்தம் 1,624 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 353 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 41,231 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 89,689 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,004 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 13,510 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,712 ஆகவும், சென்னையில் 368 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,409 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1,43,988 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
» ஸ்மிருதி இரானி மகள் குறித்த பதிவுகளை நீக்க காங். தலைவர்களுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
» சிலை கடத்தல் பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
22,697 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 203.60 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.