சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1219, பெண்கள் 897 என மொத்தம் 2,116 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 528 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 24,258 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 69,526 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,243 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 16,702 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,142 ஆகவும், சென்னையில் 561 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,557 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
» கர்நாடக சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து கோர விபத்து; 4 பேர் பலி | அதிர்ச்சி வீடியோ
» வெளிநாடுகளில் கல்வி கற்போருக்கான தேசிய கல்வி உதவித் தொகை கொள்கையில் மாற்றம்
1,45,654 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,517 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 200.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.