சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,331 பெண்கள் 985 என மொத்தம் 2,316 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 596 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 17,777 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து ,62,662 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,458 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 17,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் விவரம் : விருதுநகரைச் சேர்ந்த 52வயது ஆண் ஒருவர் 13-ம் தேதி விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 16-ம் தேதி கரோனா பாதிப்பு காரணமாகவும், நுரையீரல் செயலிழப்பு காரணமாகவும் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,340 ஆகவும், சென்னையில் 607 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு சற்றே குறைந்து வருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
» தமிழகத்தில் புதிதாக 2,340 பேருக்கு கரோனா; சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு
» தமிழகத்தில் புதிதாக 2,312 பேருக்கு கரோனா; ஒருவர் உயிரிழப்பு
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,528 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1,43,449 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,790 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 199.98 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.