தமிழகத்தில் புதிதாக 2,312 பேருக்கு கரோனா; ஒருவர் உயிரிழப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,275 பெண்கள் 1,037 என மொத்தம் 2,312 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 618 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 13,121 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து ,57,605 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,682 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 17,487பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் விவரம்: கடந்த 10-ம் தேதி கரோனா தொற்று காரணமாக திருவள்ளூரைச் சேர்ந்த 71-வயதான ஆண் ஒருவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்சினை இருந்தது. கரோனாவின் தீவிரத்தால் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த 14-ம் தேதி மதியம் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,283 ஆகவும், சென்னையில் 682 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு சற்றே குறைந்து வருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,038 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1,39,073 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16,994 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 199.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE