தமிழகத்தில் சற்றே அதிகரித்த கரோனா: புதிதாக 64 பேருக்கு பாதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 26, பெண்கள் 38 என மொத்தம் 64 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,217 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 15,718 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 56 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 474 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 58 ஆகவும், சென்னையில் 28 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு சற்றே அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 3,545 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 4,30,94,938 என்றளவில் உள்ளது. நாடு முழுவதும் 19,688 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,549 பேர் குணமடைந்தனர். இதுவரை 4,25,51,248 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 5,24,002 பேர் கரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,365 பேருக்கு தொற்று உறுதியானது. 15வது நாளாக டெல்லியில் அன்றாட பாதிப்பு 1,000ஐ கடந்து பதிவாகியுள்ளது. டெல்லியில் அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 6.5% என்றளவில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE