நாட்டில் 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 24 மணி நேரத்தை விட 65 சதவீதம் அதிகம். அவர்களையும் சேர்த்து இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 47,594 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 12,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்து 22,006 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 நேரத்தில் 40 பேர் இறந்துள்ளனர்.

குணமடைவோர் 98.76 சதவீதமாக உள்ளனர். நாடு முழுவதும் 186.90 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE