தனுஷின் 50-வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன்? 

By செய்திப்பிரிவு

‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு பிறகு உருவாகும் தனுஷின் 50ஆவது படத்தை அவரே இயக்க உள்ளதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. தனுஷின் 50ஆவது படமாக உருவாகும் இப்படத்தை அவரே இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் நடிப்பார்கள் என சொல்லப்படும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE