ரஜினியைத் தொடர்ந்து தனுஷுடன் கைகோர்க்கும் நெல்சன்?

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படம் வெளியாகிறது.

இப்படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படப்பிடிப்பின் இடையே நடிகர் தனுஷை சந்தித்து படத்தின் ஒன்லைனை நெல்சன் கூறியிருக்கிறார். தனுஷுக்கு கதை மிகவும் பிடித்துப் போகவே, ’ஜெயிலர்’ படம் ரிலீசான பிறகு படத்துக்கான முழு கதையையும் நெல்சன் தயார் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ‘ஜெயிலர்’ ரிலீஸுக்குப் பிறகே படக்குழு வெளியிடும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE