’‘லியோ’வுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் விஜய்?

By செய்திப்பிரிவு

‘லியோ’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

லோகேஷ் கனகராஜுடன் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து ‘லியோ’ படத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜயுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமற்ற இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ‘கஸ்டடி’ தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE